
15ஆவது பொதுத்தேர்தல் இவ்வாண்டு நவம்பர் 19இல் நடைபெறும் என்றும் வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 5ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
அத்தோடு பெர்லிஸ், பகாங், பேராக் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் அதன் வேட்புமனு தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறு,ம் என்று தேர்தல் ஆணையர் டான்ஸ்ரீ Abdul Ghani Salleh (அப்துல் கனி சாலே) தெரிவித்தார்.
இப்பொதுத்தேர்தலோடு கெடா, கிளந்தான், திரெங்கானு, பக்காத்தானின் கீழுள்ள சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும்.
மேலும், சபா, சரவாக், ஜொகூர், மலாக்கா ஆகிய மாநிலத் தேர்தல்கள் கடந்த ஈராண்டுகளுக்குள் நடைபெற்றிருப்பதால் அவற்றின் தேர்தல்களும் இவ்வாண்டு நடைபெறாது.
