
பிரதமர் வேட்பாளர்களாகப் போட்டியிடுவோர் நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதாரம், விலையேற்றம், ரிங்கிட்டின் மதிப்புச் சரிவு போன்றவற்றிற்கு தெளிவான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பெரிக்காத்தான் நேஷனலின் முஹிடின் யாசின் ஆகியோர் ஜசெக, பிகேஆர், இஸ்ரேல், யூதர்கள், சீன சமூகத்தைத் தாக்கிப் பேசவே வல்லவர்களாக இருக்கும்போது, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க தெளிவான சிந்தனை எதனையும் கொண்டிருக்கவில்லை என்று அன்வார் சாடினார்.
நாட்டின் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண பொது விவாதம் நடத்தினால், இஸ்மாயில் சப்ரி, முஹிடின் யாசின் ஆகியோருடன் மோதி, விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக அன்வார் சவால் விடுத்தார்.
