
தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசாங்கம் நாட்டின் கல்வித் துறையை முழுமையாக உருமாற்றம் செய்ய வேண்டுமென பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தற்போதைய கல்வித் துறை முறையாக இல்லை. மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க ஊக்குவிப்பு தரப்படுவதில்லை. பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டும்போது அதனை ஏற்றுக் கொள்வதில் பெருந்தன்மை இல்லை. ஆசிரியர்கள் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டினால் அதனை பெருமனதோடு எடுத்துக் கொள்வதில்லை.
கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வரும்போது, அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதில் தவறேதும் இல்லையென்றும் அன்வார் வலியுறுத்தினார்.
