
ஒன்றுபட்ட மலேசியாவையே நமது முன்னோர்கள் விரும்பியதாகவும் ஆனால் தற்போது நாட்டின் நிலை பரிதாபமாகவும் அரசியல் கட்சிகள் தங்களையும் மக்களையும் குழப்பிக் கொண்டும் வருவது கவலையை அளிப்பதாக மூசா ஹீத்தாம் தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையை அனுபவித்து வரும் வேளையில், நாட்டை வழிநடத்த உலகத் தரத்திலான தலைமைத்துவம் கொண்ட, கல்வி நிரம்பிய, அனுபவமிக்க, எதனையும் எதிர்கொள்ளக் கூடிய தைரியமான தலைவர் நம்மிடையே குறைவு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், போட்டி நிறைந்த உலகில் நாட்டை வழி நடத்த தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், முஹிடின் யாசின் அல்லது அன்வார் இப்ராஹிம் ஆகியோர் சிறந்து விளங்க முடியும் என மூசா ஹீத்தாம் தெரிவித்தார்.
