
பொதுத்தேர்தலில் துன் மகாதீரின் தலைமையிலான Gerak Tanah Air (கெராக் தானா ஆயர்) கூட்டணியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லையென அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் பக்காத்தானுடன் ஒத்துழைத்து தேசிய முன்னணியை வீழ்த்த அன்வாருடன் தாம் பேச இருப்பதாகக் கூறி, மகாதீர் விடுத்த அழைப்புக்கு நன்றி என்றும், ஊழலை ஒழிக்க அவரின் எண்ணத்தைப் பக்காத்தான் ஆதரித்தாலும் அவரோடு ஒத்துழைக்கும் பேச்சுக்கு இடமேயில்லை என்று அன்வார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மகாதீரின் வாக்குறுதியை மதித்ததால் ஏற்பட்ட ஏமாற்றம் போதுமென்றும், இனி அவரோடு கூட்டு சேர்வது முடியாத ஒன்று என்றும் அன்வார் தெரிவித்தார்.
