
இனப் பாகுபாடு காட்டுவது பழைமைவாதிகளின் சிந்தாந்தம் என மூடா கட்சித் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ரேப் எனும் பாடகர்கள் குழுவினரின் இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிகழ்ச்சியில் பேசிய சைட் சாடிக், கடுமையாக உழைக்கும் இந்திய மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர வாய்ப்பும் உபகாரச் சம்பளமும் வழங்கப்படாதது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிலையை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க, ஆட்சியை மாற்ற முனைப்பு காட்ட வேண்டுமென சைட் சாடிக் கேட்டுக் கொண்டார்.
