
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தீபாவளிப் பண்டிகையைப் பாதிக்கும் என்று சில தலைவர்கள் கூறியது போலல்லாமல், இவ்வாண்டு தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப் பட்டதாகப் பராமரிப்புப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
வழக்கத்துக்கு மாறாகவே இவ்வாண்டின் தீபாவளி கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் நடத்திய தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்டு பேசும்போது, இஸ்மாயில் சப்ரி அதனைத் தெரிவித்தார்.
தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிய அவர், இம்மாதிரியான மகிழ்ச்சியான கொண்டாட்டமே பல்லின கலாச்சாரத்திற்கு வித்திடும் என்றும் குறிப்பிட்டார்.
அவ்விருந்து நிகழ்ச்சியில் மசீச தலைவர் வீ கா சியோங், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
