
பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் தீபகற்க மலேசியா, சபா, சரவாக் மாநிலங்களுக்குத் தலா ஒரு துணைப் பிரதமர் நியமிக்கப்படுவார் என்று அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி உறுதி கூறியிருப்பதை பாஸ் கட்சி சாடியுள்ளது.
பொதுத்தேர்தலில் வெற்றி பெற எந்த வாக்குறுதியையும் அள்ளி வீசலாம். ஆனால், அது சாத்தியமா என்பதை மக்கள்தான் முடிவு செய்வர் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் குறிப்பிட்டார்.
அது அம்னோவின் வெற்று வாக்குறுதிகள், அதனால் ஆகப் போவது எதுவுமில்லை. அரசின் செலவுதான் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.
