
பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய, போட்டியிடும் தொகுதிகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதாக மஇகாவின் துணைத் தலைவர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதாகவும் கட்சித் தலைவர் அது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சரவணன் தெரிவித்தார்.
கடந்த முறை மஇகா, சுங்கை சிப்புட், சுங்கை பூலோ, உலு சிலாங்கூர், காப்பார், கோத்தா ராஜா, போர்ட்டிக்ஷன், சிகாமாட், கேமரன் மலை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
