
நாட்டின் பொருளாதாரச் சரிவு, பிரச்சினைகளை அரசு கையாளுவதில் பெரும் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஆதரவு இல்லாமல் தேசிய முன்னணி பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவது மிகவும் சிரமம் என்று ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
பெரும்பாலோர் அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதால், தேசிய முன்னணியின் அதீத நம்பிக்கை தகர்ந்து விடும் என அவர் தெரிவித்தார்.
பொருளாதார நலிவு, விலைவாசி ஏற்றம், பணவீக்கம், வேலையில்லா பிரச்சினைகள் போன்றவற்றில் 84 விழுக்காடு இளைஞர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதால், பொதுத்தேர்தலில் அது தேசிய முன்னணிக்கு எதிர்மறையான முடிவை அளிக்கும் என ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
