
தமக்கு எதிராகச் செயல்பட்ட அம்னோ தலைவர்களுக்குத் தொகுதி வழங்காமல் அவர்களைப் பழி வாங்கியிருப்பதாக அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி விமர்சிக்கப்படுகிறார்.
ஷாஹிடான் காசிம், அனுவார் மூசா, ஸஹிடி ஸைனால் அபிடின், சிலாங்கூர் தொடர்புக் குழுத் தலைவர் நோர் ஓமார் ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் பிரதமர் இஸ் மாயில் சப்ரி யாக்கோப்பின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸமாயில் அமைச்சரவையில் தற்போது இடம் பெற்றிருக்கும் முக்கிய தலைவர்களை வெளியேற்றியதன் மூலம், கட்சிக்குள் சலசலப்பும் வெறுப்புணர்வும் ஏற்பட்டு வெற்றிக்குச் சரிவை ஏற்படுத்துவது நிச்சயம் என்று சொல்லப்படுகிறது.



