
15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சபா, சரவாக்கில் அங்குள்ள கூட்டணிகளோடு கூட்டாட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிகேஆர் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்ல) தெரிவித்தார்.
அங்குள்ள கூட்டணிகளிடையே அது பற்றி கலந்தாய்வு நடத்தப்படமே ஒழிய, தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



