
சுங்கை பூலோ தொகுதியில் ஆர். சிவராசாவையே மீண்டும் போட்டியிட வேண்டுமென தாம் பரிந்துரைத்ததாகவும் ஆனால் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் அதனை வேறு விதமாக நோக்கியதாக Rafizi Ramli ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர் தேர்வுச் செயற்குழு, வேட்பாளர்களின் தகுதி, மக்கள் செல்வாக்கு போன்றவற்றை ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் தலைவரே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
சிவராசாவையும் Maria Chin Abdullah (மரியா சின் அப்துல்லா) வையும் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கியது கட்சிக்குப் பின்னடைவைக் கொண்டுவரும் என்று உதவித் தலைவர் Tian Chua (தியான் சுயா) எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



