
நாட்டில் கன மழையினால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டால், 15ஆவது பொதுதெர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என்று பராமரிப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
அப்படி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைப்புகளோடு பேசி, தகுந்த நேரத்தில் அதனை நடத்த முடிவெடுக்கப்படும்.
மலேசிய வானிலை ஆய்வு மையம், பேரிடர் மேலாண்மை மையம் ஆகியவற்றோடு கலந்துரையாடல் நடத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இடையறாது பெய்து வரும் கன மழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என்பதால், வெள்ளம் கடுமையாகும் என கணிக்கப்படுகிறது.
