
தாம் யாருக்கும் கைக்கூலியாக செயல்படவில்லை என்றும் தலைவர்களை மாற்றவே பொதுதேர்தலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை அவர் முற்றிலும் மறுத்தார்.
தேர்தலில் போட்டியிட சில தலைவர்களை மாற்றியிருப்பது கட்சிக்குள் புதிய ரத்தம் பாய்ச்சவும் கட்சியை மேலும் பலப்படுத்தவுமே என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் புரையோடிப் போயிருக்கும் அரசு நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றி, மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தை உருவாக்கவே பக்காத்தான் கூட்டணி முயல்வதாக அவர் தெரிவித்தார்.
தோழமைக் கட்சிகளோடு நல்லுறவின் மூலம் எதிர்பார்க்கும் வெற்றியை ஈட்டமுடியும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலில் இனவாதம், சமயவாதமும் ஏற்படாமல் பக்காத்தான் தன்னாலான அனைத்தையும் செய்யுமென அவர் தெரிவித்தார்.
