
நாட்டில் குடியிருக்கும் மற்ற இனத்தவரை இனிமேலும் வந்தேறிகள் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாங்கி தொகுதி பக்காத்தான் வேட்பாளர் வழக்கறிஞர் ஷாரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் வசிப்போருக்கிடையே எந்தவிதமான பாகுபாடும் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே தாம் அரசியலில் குதித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
நமது அரசு எல்லா இனத்துக்குமானது என்றும் அதில் இன ரீதியாகவும் சமய ரீதியாகவும் பாகுபாடு இருக்கக் கூடாதென்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அரசு ஓரினத்தின் நல்வாழ்வுக்காகப் பாடுபடக் கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
