
பிகேஆர் கட்சியின் தொற்றுநர்களின் ஒருவராக இருந்த தியான் சுவா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தமது நெடுநாளைய நண்பராக இருந்த தியான் சுவா, கட்டசியின் கட்டுப்பாட்டை மதிக்காமல், பத்து தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பி.பிரபாகரனை எதிர்த்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
பிரபாகரன் அத்தொகுதியில் போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில், தொகுதி கைமாறுவதை விரும்பாமல், அத்தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தியான் சுவா காரணம் கூறுகிறார்.
2018இல் அவருக்கு நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.
