
இரு லாரிகள் உட்பட ஐந்து வாகனங்களை உட்படுத்திய விபத்தின் காரணமாக, குவந்தானை நோக்கி செல்லும் கோலாலம்பூர் – காராக் இடையிலான நெடுஞ்சாலையில் மோசமான வாகன நெரிசல் ஏற்பட்டது.
பகாங், பெந்தோங் அருகில் மதியம் மணி 12.30 -க்கு நிகழ்ந்த அந்த விபத்தால் , 20 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பகாங் தீயணைப்பு மீட்பு துறையின் பொது தொடர்பு அதிகாரி Zulfadli Zakaria தெரிவித்தார். Toyota Vios, Honda Civic , Naza Ria ஆகிய மேலும் 3 வாகனங்களை உட்படுத்திய அந்த விபத்தில் இரு ஆடவர்கள் காயமடைந்தனர்.



