
உரிமம் இன்றி வட்டித் தொழிலில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்தாண்டு ஏப்ரலில் பண்டார் பாரு செந்தூலில் Yap Chee Siang (யாப் சே சியாங்- 25) என்பவர் 158,120 ரிங்கிட்டை Wong Chiew Ken (வோங் சியூ கென்-34) என்பவருக்குக் கடன் கொடுத்ததாக அவர் மீது 1951ஆம் ஆண்டு கடன் சட்டத்தின் வழி குற்றம் சுமத்தப்பட்டது.
ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில், 30,000 ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அவரது வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி பக்ரி அப்துல் மஜிட் அறிவித்தார்.


