
ஒற்றுமை அமைச்சரவையில் தாம் சேர்க்கப்படாவிட்டாலும், மக்களுக்கான தமது சேவை தொடரும் என முன்னாள் சுகாதார அமைச்சரும் கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் Zulkifli Ahmad (சுல்கிப்லி அமாட்) தெரிவித்தார்.
தமக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படாத காரணத்தை உணர்வதாகத் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் பொருள்களின் விலையுயர்வைத் தடுக்கவும் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு கால அவகாசம் தர வேண்டுமென சுல்கிப்லி கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பிரச்சினைகளைப் படிப்படியாக தீர்த்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்த அன்வாருக்கு தகுந்த


