
கம்போங் காஜாவில் டத்தோ சாகோர் காரோட்டும் தடத்தில், பந்தயக் கார் ஒன்று மோதி, பார்வையாளர் ஒருவர் மரணமடைந்தார்.
பொறியியல் உதவியாளரான நபர் மெலிந்தாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணடைந்தார்.
அவருக்குத் தலையில் பலத்த காயமும் நுரையீரலில் இரத்தம் கசிந்ததாலும் மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்து சம்பந்தமான முழு அறிக்கை கிடைத்த பின்னர், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சிக் குழு உறுப்பினர் Khairudin Abu Hanifah (கைருடின் அபு ஹனிஃபா) தெரிவித்தார்.



