
சீனாவில் இருந்து வரும் விமானங்களின் கழிவு நீரில் கோவிட்டுக்கான பிசிஆர் சோதனையை நடத்துவதில் தவறேதும் இல்லையென சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த நடைமுறையானது சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படுவதாகவும், மனிதர்களின் மலம் மற்றும் உமிழ்நீர், சளி போன்ற கழிவுகளில் கோவிட் கிருமி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அதனை மலேசியாவிலும் கடைபிடிப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த நடைமுறையை சிலர் கேலி செய்து ஊடகங்களில் புகார் தெரிவித்திருப்பது தேவையற்ற செயலென அவர் குறிப்பிட்டார்.



