
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமது குடியுரிமை விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த உள்துறை அமைச்சுக்கு எதிரான 67 மூதாட்டி ஒருவர் வழக்கைத் தொடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி Ahmad Kamal Md Shahid (அமாட் கமால் மாட் ஷாஹிட்) அனுமதியளித்துள்ளார்.
அந்த மூதாட்டி 2017இல் உள்துறை அமைச்சுக்கு அனுப்பிய குடியுரிமைக்கான விண்ணப்பத்தில், தாம் 1955இல் தெலுக் இந்தான் மருத்துவமனையில் பிறந்த பின்னர் தமது தாயார் அனாதையாக விட்டுச் சென்றதால், தாம் ஒரு வளர்ப்புப் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
1974இல் தாம் திருமணம் செய்து கொண்ட கணவர் 2016இல் இறந்ததாகவும் அவர் நாடற்றவர் என்றும் ஆனால், நிரந்தர குடியிருப்பு அனுமதியைப் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
2017இல் குடியுரிமைக்காக செய்து கொண்ட தமது விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்
