
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரும்பாலான பூர்வகுடி மாணவர்கள் தங்களது கல்வி முடிந்து, வேலையில்லாமல் சொந்த கிராமங்களுக்கே திரும்பி விடுவதாக மேலவை உறுப்பினர் Ajis Sitin (அஜிஸ் சித்) தின் தெரிவித்துள்ளார்.
10 விழுக்காடு மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலும் விரல் விட்டு எண்ணும் அளவில் மாணவர்கள் தொழில்நுட்ப, தொழில்திறன் பயிற்சிகளுக்கு நுழைந்த பின்னர், வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறனர்.
நகர்ப்புறங்களில் வேலை கிடைக்காது, கடுமையான அழுத்தம் காரணமாகவும் அவர்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி சென்று பெற்றோர்களுக்கு உதவி செய்வதாக அஜிஸ் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர்களுக்கு அரசு வேலைகளில் கோட்டா முறையைக் கொண்டு வருவதோடு ஜக்கோவா எனும் பூர்வகுடி மேம்பாட்டு அமைப்புகளில் வேலை தர அரசு முன்வர வேண்டுமென்றும் அஜிஸ் கேட்டுக் கொண்டார்.
ஜக்கோவா அமைப்புகளில் 1,000க்கும் அதிகமான வேலைகளில் பூர்வகுடி அல்லாதவர்களே ஆக்கிரமித்து வருவது குறிப்பிடத்தக்கது.
