
🔊To listen to this news in Tamil, Please select the text.
15ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ படுதோல்வி அடைந்ததற்கு தாம் மட்டுமே காரணம் இல்லையென்றும் அதில் பிரதமர் வேட்பாளரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் பொறுப்பேற்க வேண்டுமென அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் வெற்றி சரிந்ததற்கு உள்கட்சி துரோகமும், ஒருவருக்கு ஒருவருக்கிடையிலான மோதலும், நிதி இல்லாத பிரச்சினையும் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் தம்மைப் பதவியிலிருந்து விலக வேண்டுமென்ற அறைகூவலை விடுப்பது நியாயமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அம்னோவின் இயலாமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிக் கூட்டணி, பணத்தை வாரி இறைத்து இளைஞர்களை வசப்படுத்தி, வெற்றி பெற்றதாக நேற்று அம்னோ பொதுப் பேரவையில் கொள்கை உரை ஆற்றும்போது ஸாஹிட் குற்றம் சாட்டினார்.


