
🔊To listen to this news in Tamil, Please select the text.
முட்டையின் விலையை சந்தையின் நிர்ணயத்திற்கே விட்டுவிட ஆய்வு நடத்தப்படுவதாக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார். முட்டையைச் சந்தை விலைக்கு விட்டு, பி40 குடும்பங்களுக்கு உதவிநிதி வழங்கவும் ஆய்வு செய்யப்படும் என முகமட் சாபு தெரிவித்தார்.
தற்போது ஏ கிரேட் முட்டை 45 காசாகவும் பி கிரேட் முட்டை 43 காசாகவும் விற்கப்படுகிறது.
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு, நிதியமைச்சு, பொருளாதார அமைச்சு ஆகிவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் முட்டை உற்பத்தி சீரடைந்தால், தற்போது வெளிநாடுகளில் இருந்து முட்டையின் இறக்குமதி நிறுத்தப்படும் என முகமட் சாபு தெரிவித்தார்.


