34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இந்திய வரலாற்றில் யாராவது பார்த்திருக்கிறீர்களா? அமைச்சர் நாசரின் செயலை விமர்சித்த அண்ணாமலை

🔊To listen to this news in Tamil, Please select the text.

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொண்டர்களிடம் கோபத்தை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் அமர நாற்காலிகள் எடுத்து வருவதறகு தாமதம் ஆனதால், தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார். அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்திய வரலாற்றில், ஒரு அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

‘திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆவடி நாசர் தான் இப்படி செய்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகிறார். கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை. மக்களை அடிமை போல நடத்துவதுதான் திமுக’ என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles