
🔊To listen to this news in Tamil, Please select the text.
தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிப்பதைத் தடை செய்யும் அரசியல் நிதியுதவிச் சட்டத்தை இயற்ற வேண்டுமென பெர்சே அறைகூவல் விடுத்துள்ளது.
1954ஆம் ஆண்டு, தேர்தல் குற்றவியல் சட்டம், வாக்கு சேகரிக்க நன்கொடையும் அன்பளிப்புகளும் கொடுப்பது லஞ்சமே என வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், அது அதிகமாகவே அளிக்கப்பட்டு, அதற்கு பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்படுவதை பெர்சே சுட்டிக் காட்டுகிறது.
15ஆவது பொதுத்தேர்தலில் மாராங், கோல திரெங்கானு, கெமாமான் ஆகிய தொகுதிகளில் பாஸ் கட்சி வாக்காளர் குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சத்தை தர்மம் என்ற நோக்கில் பார்க்க வேண்டுமே தவிர அதனை லஞ்சமாகக் கருதக்கூடாது என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருப்பது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.



