
🔊To listen to this news in Tamil, Please select the text.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு சமூகப் பிரதிநிதியுமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ அவர்கள் ஒற்றுமை பொங்கல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார். இப்பொங்கல் விழா ஜனவரி 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 4 மணி முதல் No 15A Jln, Mohd Tahir 8, Taman Sri Mewah 4, Off jalan Sungai Jati, 41200 Klang, Selangor- di perkarangan Pusat Khidmat, Masyarakat DUN Sentosa எனும் இடத்தில் நடைபெறவிருப்பதால், அதில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொள்கிறார். மக்களிடையே சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் சமூகங்களிடையே நல்லிணக்கதையும் விதைக்கவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
