
🔊To listen to this news in Tamil, Please select the text.
2015 ஜூலை 5ஆம் தேதி இரவு 12லிருந்து காலை ஒரு மணி வரை பாதுகாவலரான கே. கோபிநாதன் (44) என்பவரைக் கொன்ற குற்றத்தில் பழைய இரும்பு வியாபாரியான ஆர். சரவணனுக்கு (41) ஈப்போ உயர்நிதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அந்தக் குற்றத்தை சரவணன் செமோர், மேடான் கிளேபாங் ரெஸ்து, நஸ்மீர் உணவகத்தின் பின் பகுதியில் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அரசுத் தரப்பு சந்தேகமின்றி அக்குற்றத்தை நிரூபித்துள்ளதால், சரவணனுக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி டத்தோ Anselm Charles Fernandis (ஆன்செல்ம் சார்ல்ஸ் ஃபெர்னாண்டிஸ்) குறிப்பிட்டார்.
