
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவின் உச்சமன்றம் தம்மை கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் இடைநீக்கம் செய்தது ஒரு முடிவார்ந்த முடிவல்லவென்றும் அது தமக்கு ஒரு தொடக்கமே என முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேய்ன் தெரிவித்தார்.
தமது செம்ரோங் வாக்காளர்களோடு கலந்தாய்வு செய்த பின்னர், தமது அடுத்தக் கட்ட நடவடிக்கையை அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென தெரிவிக்காத நிலையில், பெர்சத்துவின் தலைவர் முஹிடின் யாசினை பிரதமராக 10 எம்பிக்களின் சத்தியப் பிரமாணப் பத்திரங்களைத் தயாரித்தவர் ஹிஷாமுடின் என குறிப்பிடப்பட்டுள்ளது.
