
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களைப் பக்காத்தானில் சேர்க்க உறுப்புக் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உறுப்புக் கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிக்கவும் ஒருமித்த கருத்து ஏற்படவும் அரசாங்க நிர்வாகத்தில் அமைதியும் நல்லிணக்கமும் ஓங்க, அவற்றோடு கலந்து பேசுவது மிகவும் முக்கியம் என ஈப்போவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அம்னோ தலைவர்கள் யாரும் இதுவரை பக்காத்தானில் சேரும் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
