
🔊To listen to this news in Tamil, Please select the text.
கூட்ட நெரிசல் காலங்களில் அங்பாங், ஸ்ரீபெட்டாலிங் தடத்தில் செல்லும் எல்ஆர்டி, மற்றும் மோனோ ரயில் சேவைகள் காலை 6.00லிருந்து 10.30 மணி வரைக்கும், பின்னர் மாலை 4.30யிலிருந்து இரவு 8.30 மணி வரைக்கும் நீட்டிக்கப்படும் என பிராசரனா நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய கால கட்டத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அலைமோதுவது வழக்கமான ஒன்றாகும்.
பண்டாராயா மற்றும் மாஸ்ஜிட் ஜாமேக் எல் ஆர்டி சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் கூட்டம் நெரிசல் நேரத்திற்கான கூடுதல் நேரம் இன்றிலிருந்து அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
