
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கு தைப்பூச கொண்டாட்டத்தை ஒட்டி கெபுன் பூங்கா வர்த்தகக் கடை வளாகத்தில் விற்பனை செய்து கொண்டிருந்த சிறு வர்த்தகர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் வெள்ளிக்கிழமை காலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் கும்பலைச் சேர்ந்த அவர்கள் இருவரும் குடிபோதையில் அந்த வர்த்தகரை மிரட்டியதோடு, பணம் கொடுக்க மறுத்தால் கடையை உடைத்து நொறுக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு தாங்கள் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்பதை அடையாளம் காட்டியதை அடுத்து, அவர்கள் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள் என போலீஸார் அறிவித்தனர்.



