
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொருளாதார, நிதித் துறையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் தமது புதல்வி நூருல் இஸ்ஸா, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய மாட்டார் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வத்தைச் சேர்க்கவும், டெண்டர், குத்தகை, திட்டங்களை வழங்குவதில் தலையிடவும் மாட்டார் என அவர் தெரிவித்தார்.
அவரின் அனுபவத்தையும் தகுதியையும் அரசு நிர்வாகத்தில் செலுத்தி நாட்டின் மேம்பாட்டுக்குப் பாடுபடுவார்.
ஆட்சியில் இருக்கும்போது குடும்பத்தினருக்கும் அணுக்கமானவர்களுக்கும் கோடிக் கணக்கான ரிங்கிட் பெறுமான திட்டங்களை வாரிக் கொடுத்தவர்களே நூருலின் நியமனத்தில் குற்றம் காண்பதாக அன்வார் சாடினார்.


