
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரிக்காத்தான் ஆட்சி காலத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்த வேளையில், கோவிட் தடுப்பூசிகள் மில்லியன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டன.
அந்தக் கொள்முதலைப் பொது கணக்குக் குழு விசாரித்தபோது, அது சட்டத்துறைத் தலைவரின் (ஏஜிசி) அனுமதியின்றி, அரசின் கொள்முதல் நடைமுறைக்கு மாறாக வாங்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.
அது சம்பந்தமாந வெள்ளை அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா தாக்கல் செய்வார் என்றும் அதற்கான பதிலை அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த Adham Baba (அட்ஹாம் பாபா) Khairi Jamaluddin (கைரி ஜமாலுடின்) மற்றும் நிதியமைச்சராக இருந்த Tengku Zafrul Aziz (தெங்கு ஸப்ருல் அஸிஸ்) ஆகியோர் சொல்ல வேண்டுமென்றும் அன்வார் குறிப்பிட்டார்.
