
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் அமைச்சரவையின் ஒப்புதலோடுதான் 2.4 மில்லியன் மருந்தளவு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டடதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்தக் கொள்முதலில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை என்றும் கைரி தெரிவித்தார்.
கொள்முதல் நடைமுறைக்கு இணங்கவே மருந்துகள் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தம்மீது தனிப்பட்ட வெறுப்பைக் காட்டவே அக்குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
