
🔊To listen to this news in Tamil, Please select the text.
தாம் தோற்றுவித்த பெஜுவாங்கிலிருந்து துன் மகாதீரும் அவரது ஆதரவாளர்கள் 12 பேரும் விலகியதை நஜிப் ரசாக் விமர்சித்து கேலி பேசியுள்ளார்.
அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் 20 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த பின்னர், மகாதீர் பதவியிலிருந்தும் அரசியலில் இருந்தும் விலகினார்.
பதவி மோகம் கொண்ட அவர் அம்னோவிலிருந்து விலகி, பெர்சத்துவைத் தோற்றுவித்து, சிறையிலிருந்த அன்வாருடன் கூட்டு சேர்ந்து, 14ஆவது பொதுதேர்தலில் வென்று பாக்காத்தான் ஆட்சியில் பிரதமரானார்.
அதன்பின்னர், ஒருதலைபட்சமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய அவரை பெர்சத்து கட்சியும் அவைத் தலைவர் பதவியிலிருந்து விலக்கியது. அதன் பின்னர் பெஜுவாங்கை தோற்றுவித்து 15ஆவது பொதுத்தேர்தலில் லங்காவி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோற்றதோடு பெஜுவாங்கும் படுதோல்வி அடைந்தது.



