
🔊To listen to this news in Tamil, Please select the text.
2022ஆம் ஆண்டு நாட்டில் 153 தடுப்புக் காவல் மரணங்கள் நேர்ந்துள்ளதாக நேற்று உள்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளது.
அதில் 121 ஆண்கள், 25 பெண்கள் மற்றும் 7 சிறார்களும் அடங்குவர் என்றும் 150 மரணங்கள் குடிநுழைவுத் துறையின் தடுப்பு முகாம்களிலும் 11 சம்பவங்கள் சிறைகளிலும் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குடிநுழைவு தடுப்பு மையங்களில் நேர்ந்த 150 மரணங்கள் அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் தடுப்புக் காவலில் நடந்த மரணங்களில் 11 மலாய்க்கார கைதிகளும் சீனர் ஒருவர், வெளிநாட்டுக்காரர் ஒருவரும் அடங்குவர்.



