
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் ஊழியர் சேமிப்பு நிதி சந்தாதாரர்களில் மூன்றில் இரண்டு மடங்கினர் பணி ஓய்வு பெறும்பொது வறிய நிலைக்குத் தள்ளப்படுவர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
67 லட்சம் சந்தாதாரர்கள் 55 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அவர்களின் இபிஎஃப் சேமிப்பு 10,000 ரிங்கிட்டுக்கும் குறைவான- தாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஈராண்டுகளில் நான்கு முறை இபி எஃப் சேமிப்பை அரசு மீட்க அனுமதியளித்த பின்னர், அதன் சேமிப்பு 36 லிருந்து 29 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தொழிலாளர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு, இனி மேலும் இபிஎஃப் நிதியை மீட்கும் நடவடிக்கைக்கு அனுமதியில்லை என்றும் அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



