
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜனவரி 31ஆம் தேதி பத்தாங் காலியில் நேர்ந்த நிலச்சரிவினை ஆராய அரச விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்குத் திட்டமில்லை என பிரதமர் துறை அமைச்சர் Armizan Ali அர்மிஸான் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த நிலச்சரிவில் 31 பேர் மரணமடைந்து 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நாட்டையே உலுக்கிய அந்த நிலச்சரிவின் காரணத்தை அறிய தடயவியல், புவியியல் நிபுணர்களும் தொழில்நுட்ப ஏஜென்சிகளும் ஆய்வு மேற்கொண்டு வருவதால், அதனை விடுத்து அரச விசாரணை மேற்கொள்ள அவசியம் எழவில்லை என அவர் தெரிவித்தார்.
கெப்போங் எம்பி Lim Lip Eng (லிப் லிம் எங்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அர்மிஸான் அலி, நிபுணர்களின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.



