
🔊To listen to this news in Tamil, Please select the text.
நீர் மூழ்கிக் கப்பலுக்கு அரசு நிதியை ஒதுக்கும் வேளையில், ராணுவத்தினரின் குடியிருப்புக்கு அரசு கை விரிக்கலாமா என சபா முன்னாள் முதலமைச்சர் Shafie Abdal (ஷாபி அப்டால்) நாடாளுமன்றத்தில் சாடியுள்ளார்.
பெரும்பாலான ராணுவ குடியிருப்புகளில் ஓர் அறை மட்டுமே இருக்கும் நிலையில், வீரர்கள் தங்களது குடும்பத்தினரோடு குடித்தனம் நடத்துவது எவ்வளவு சிரமம் இருப்பதை அரசு சிந்திக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
ராணுவ வீரர்களுக்கு வசதிகள், ஓய்வூதியம் போன்றவற்றை அரசு மறு ஆய்வு செய்ய வெண்டுமென்றும் தற்காப்பு அமைச்சர் நாட்டிலுள்ள ராணுவ குடியிருப்புகளில் ஆய்வு நடத்தி அதற்கேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென ஷாபி அப்டால் கேட்டுக் கொண்டார்.



