
🔊To listen to this news in Tamil, Please select the text.
2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஆசிரியர்களின் அளப்பரிய சேவையை வெகுவாகப் பாராட்டினார்.
பள்ளி, உயர்கல்வி மாணவர்களுக்கு 50,000 மடிக் கணினிகளை வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 5,520 கோடியில், 920 கோடி ரிங்கிட் பழுதடைந்த 380 பள்ளிகளைச் சீரமைக்க 92 கோடி ரிங்கிட் செலவிடப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
7 புதிய பள்ளிகளை நிர்மாணிக்க 56 கோடி செலவிடப்படும் என்றும் நாட்டில் 7 லட்சம் மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்திற்கு 77.7 கோடி ரிங்கிட் செலவிடப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



