
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒற்றுமை அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாகவும் அவர் இன்னும் உருப்படியான காரியத்தை ஆற்றவில்லை என்றும் துன் மகாதீர் சாடியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி பெற வைப்பதாகவும் மலாய்க்காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாகவும் ஒவ்வொரு நாளும் கூறி வந்தாலும், இதுவரை அன்வார் என்ன சாதித்தார் என்பது இறைவனுக்கே வெளிச்சம் என மகாதீர் குத்திக் காட்டியுள்ளார்.
தினந்தோறும் இதைச் செய்யப் போவதாகவும் அதைச் செய்யப் போவதாகவும் கூறும் அன்வார், எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மையென தமது பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையின் சந்திப்புக் கூட்டத்தில் மகாதீர் சுட்டிக்கட்டினார்.
அச்சந்திப்பின்போது தஞ்சோங் காராங் எம்பி Noh Omar (நோ ஒமார்), அம்பாங் முன்னாள் எம்பி Zuraidah Kamarudin (ஸுரைடா கமாருடின்) ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



