
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெர்சத்து கட்சியின் இரு தலைவர்கள் ஜானா விபாவா பூமிபுத்ரா பொருளாதாரத் திட்ட ஊழல் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கைது செய்யப்படக்கூடும் என்ற ஆரூடம் வலுத்து வருகிறது.
அதன் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை அடுத்து அதன் அன்றாட செலவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை அன்வார் நசுக்கி மாநிலத் தேர்தல்களில் அபரிமிதமான வெற்றியை ஈட்ட திட்டமிட்டிருப்பதாக பெர்சத்து தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், முஹிடினை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தால் அது பெரிய அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.
