
🔊To listen to this news in Tamil, Please select the text.
நகைக் கடை ஊழியர்கள், முடி திருத்துவோர், உணவக ஊழியர்களுக்கான விசாவை நீட்டிக்கும் காலம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அதன் பின்னர் கால நீட்டிப்பு இல்லையென்றும் உள்துறை துணையமைச்சர் Shamsul Anuar Nasara (ஷம்சுல் அனுவார் நசாரா) மக்களவையில் தெரிவித்தார்.
உள்நாட்டில் நகை செய்யத் தகுதியான பொற்கொல்லர்கள் இல்லையென்பதால் இந்தியாவில் இருந்து ஆள்களைத் தருவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஈப்போ பாராட் எம்பி எம். குலசேகரன் தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் நகைக்கடை, முடிதிருத்துவோர் மற்றும் உணவகங்களில் வேலை செய்ய குறைந்தது 10,000 பேர் தேவைப்படுவதாக மலேசிய வர்த்தக சங்க சம்மேளனத் தலைவர் என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



