
🔊To listen to this news in Tamil, Please select the text.
நீதிபதி நஸ்லான் கஸாலி மீதான எம்ஏ சிசியின் அறிக்கையின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தலைமை நீதிபதி, சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் செயல்பாடு எம்ஏசிசியை சிறுமைப்படுத்தும் செயலென அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Fuad Zarkasi (புவாட் ஸர்க்காசி) சாடியுள்ளார்.
எம்ஏசிசியின் அறிக்கையில், நீதிபதி நஸ்லான் சுயலாப நோக்கோடு வழக்கை விசாரித்தது நேர்மை தவறல், தொழில் நெறிமுறைக்கு மாறானது என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஊழல் தடுப்பு ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக புவாட் தெரிவித்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி Tengku Tun Maimun Tuan Mad (தெங்கு துன் மைமுன் துவான் மாட்)டும் சட்டத்துறைத் தலைவர் Idrus Harun (இட்ருஸ் ஹருணும்) நீதிபதி நஸ்லான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.


