
நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு கருதி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில்
ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குண சேகரன் உட்பட ஜனநாயக செயல் கட்சி பாதுகாப்பு இயக்கம் (Unit Tindak DAP) இணைந்து சிரம்பான் ஜெயா முழுதும் கிருமி நாசிகள் தெளிக்கும் பணியை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பல இடங்களில் கிருமி நாசினியை தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என குணசேகரன் தெரிவித்தார்.
