
🔊To listen to this news in Tamil, Please select the text.
இவ்வாண்டு இறுதிக்குள் அபாயகரமான போதைப் பொருள் பட்டியலில் ketum இலைகளை சேர்த்துக்கொள்ளும்படி MASAk எனப்படும் பொருட்களை தவறாக பயன்படுத்தும் மன்றத்தின் செயலாளரான Raja Azizan Suhaimi அரசாஙகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Ketum இலைகளின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கினால் சில தரப்பினர் விரைவாக போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடுவார்கள் என்பதால் அதனை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என அவர் தெரிவித்தார்.
Ketum இலைகள் விவகாரத்தில் உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கத் தவறினால் நாட்டில் இந்த விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்ற அச்சத்தையும் Raja Azizan சுட்டிக்காட்டினார்.
