
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைக் களைய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளத்திற்கு அதிகமாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டுமென மனிதவள அமைசர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், எல்லா தொழில்துறையும் முழுமையாக இயங்கி வரும் வேளையில் உற்பத்தி, தோட்டத் துறை, சேவைத் துறை போன்றவற்றில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 8 லட்சம் வேலைகள் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் 18 லட்சம் மலேசியர்கள் வேலை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கிக்(GIG) என்றழைக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ மனிதவள அமைச்சு பரிந்துரை ஒன்றை அமைச்சரவையிடம் தாக்கல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
